Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Saturday, March 10, 2018

பொள்ளாச்சி, உடுமலையில் தூர்தர்ஷன் நிலையம் மூடல் :

பொள்ளாச்சி, உடுமலையில் தூர்தர்ஷன் நிலையம் மூடல் :

பொள்ளாச்சி, உடுமலையில் இயங்கி வந்த துார்தர்ஷன் ஒளிபரப்பு நிலையம், வரும் 12ம் தேதி முதல் நிரந்தரமாக மூடப்படும் என, துார்தர்ஷன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரசு தொலைக்காட்சி நிறுவனமான துார்தர்ஷன், 'டிவி' சேனல், நிதிநெருக்கடியில் திணறிவருகிறது.இதன் காரணமாக, குறைந்த பவர் டிரான்ஸ்மிட்டருடன் இயங்கி வரும் துார்தர்ஷன் ஒளிபரப்பு நிலையங்களை நிரந்தரமாக மூடும் நடவடிக்கையில், தொலைக்காட்சி இயக்குனரகம் ஈடுபட்டு உள்ளது.நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுார் ஒளிபரப்பு நிலையம், 2017, மே 5 ல் மூடப்பட்டது.வால்பாறை, கவரக்கல் ஒளிபரப்பு நிலையம், கடந்த பிப்., 12 முதல் மூடப்பட்டது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள், பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.இதற்கிடையில், உடுமலை துார்தர்ஷன் நிலைய ஒளிபரப்பு சேவையும், வரும் 12ம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படவுள்ளதாக, கோவை துார்தர்ஷன் பராமரிப்பு மைய இணை இயக்குனர், களஞ்செழியன் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More