Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Saturday, February 16, 2013

கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியை அரசு கேபிள் நிறுவனத்தில் ஒளிபரப்ப

கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியை அரசு கேபிள் நிறுவனத்தில் ஒளிபரப்ப


கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியை அரசு கேபிள் நிறுவனத்தில் ஒளிபரப்ப மறுக்கும் அதிமுக அரசின் பாரபட்சம்...
கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியை உடனடியாக அரசு கேபிளில் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழ்நாட்டின் 32 மாவட்ட தலைநகரங்களிலும் (15-2-2013) தேமுதிக மற்றும் பொதுமக்களின் அறப்போர்...

சாரி ஸ்டாக் இல்லை ! ரேஷன் கடை

சாரி ஸ்டாக் இல்லை !  ரேஷன் கடை



source.facebook share
ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)

என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக

PDS 01 BE014

என்ற தகவலை 
9789006492 
9789005450 
9176480226 
9176480227 
9094831766  
9790725349 
9176480216
ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம். —

Friday, February 15, 2013

sun tv will telecast Mahabharatam Tamil serial on sunday morning 10am


sun tv will telecast Mahabharatam Tamil serial on sunday morning 10am



ஞாயிறு காலை 10 மணிக்கு 
சன் டிவியில்
 மகாபாரதம்

For the first time in the history of Tamil Television the magnum opus epic “Mahabharatham” is produced in Tamil by Cinevistaas. Poovilangu Mohan, OAK Sundar, Ilavarasan, Devipriya, Pooja Lokesh, Iswarya, Director Suresh Krishna, Cinematographer Ganesh at the Mahabharatham. The best of technicians from TV & Film industry are involved in creating this great epic.


ஞாயிறு காலை 10 மணிக்கு... மகாபாரதம் தொடரை சினி விஸ்டாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சினிமாவில் பிரபலமாக உள்ள தொழில் நுட்பக்கலைஞர்களின் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த தொடர் ஞாயிறு காலை 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.


ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எத்தனை முறை பார்த்தாலும், படித்தாலும் அலுக்காது. புதியது போலவே இருக்கும். தூர்தர்சனின் வருகைக்குப் பின்னர் அவற்றை காட்சி வடிவமாக பார்க்க நேர்ந்தது. இந்தி பேசினாலும் அதன் கதை எல்லோருக்கும் தெரியும் என்பதால் மக்கள் புரிந்து கொண்டனர். ராமாயண, மகாபாரத இதிகாசத் தொடர்கள் பின்னர் டப்பிங் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பானது. 52 வாரங்களும் மக்கள் அலுக்காமல் பார்த்தனர். அதே தொடர் இப்போது தமிழில் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. குற்றாலமலை அடிவாரத்தில் இயற்கை சூழலில் தயாராகிவரும் இந்த தொடர் வரும் ஞாயிறு காலை 10 மணிமுதல் ஒளிபரப்பாகிறது. 700 கலைஞர்கள், பிரம்மாண்டமான செட்கள், சினிமா பிரபலங்களின் இயக்கம், இசை என தயாராகிவரும் மகாபாரதம் தொடர்பற்றி ஒரு சிறப்பு பார்வை.

இதிகாசத்தின் மொத்த அம்சங்களும் மகாபாரதம் கதை மிகப்பெரியது. இதுவரை எடுக்கப்பட்ட சீரியல்களில் கால நேரம் கருதி முக்கிய அம்சங்களை மட்டுமே காட்சிப் படுத்தியிருப்பார்கள். ஆனால் இந்த தொடரில் நுணுக்கமான முறையில் ஒவ்வொரு அம்சங்களையும் காட்சி படுத்தியிருக்கின்றனராம்.

பீஷ்மரின் தியாகம் மகாபாரதம் என்றாலே பாண்டவர்கள், கௌரவர்கள், திரௌபதி, சகுனி, மற்றும் கிருஷ்ணா ஆகியோர்தான் நினைவுக்கு வருவார்கள். இந்த தொடரில் சாந்தனு தொடங்கி கங்காதேவி, பீஷ்மரின் தியாகம் போன்றவை நுணுக்கமானமுறையில் படமாக்கப்பட்டுள்ளனவாம்.

பிரபஞ்சனின் எழுத்தில் மகாபாரதம் சிறுவயதில் கேட்ட கதை, பள்ளியில் படித்த கதை, தூர்தர்சன், சன்டிவியில் பாத்த தொடர் என்றாலும் தமிழில் நேரடியாக தயாராகும் முதல் இதிகாசம் மகாபாரதம். சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் இதற்கான கதையை தமிழுக்கு ஏற்ப எழுதியுள்ளார்

700 நடிகர், நடிகையர்கள் இந்த தொடருக்காக நடிகர் பட்டாளமே களம் இறங்கியுள்ளது. 700 நடிகர்கள், துணை நடிகர்கள் மகாபாரதம் தொடரில் நடித்துள்ளனர். அழகான உடைகள், நகை அலங்காரம், பிரம்மாண்டமான செட்கள் என அசத்தியிருக்கிறார்களாம்.

பீஷ்மராக ஓ.ஏ.கே சுந்தர் பிரபலமான சின்னத்திரை நட்சத்திரங்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வியாசராக பூவிலங்கு மோகன், பீஷ்மராக ஒ.ஏ.கே. சுந்தர், சாந்தனுவாக இளவரசன், சத்யவதியாக தேவிப்பிரியா நடித்துள்ளனர். கங்காவாக ராஷ்மி, அம்பையாக பூஜா, திரௌபதியாக

பாட்ஷா இயக்குநரின் படைப்பு அண்ணாமலை, பாட்சா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா மகாபாரதம் தொடரை இயக்கியுள்ளார். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசை அமைத்துள்ளார். பாலாஜி டெலி பிலிம்ஸ்சின் கேமராமேன் கணேஷ் இந்த தொடரின் கேமராமேனாக பணிபுரிந்துள்ளார்.

கவிஞர் பா.விஜய் கைவண்ணத்தில் மகாபாரதம் தொடரின் டைட்டில் பாடல், பின்னணி இசையை தேவா அமைத்துள்ளார். பாடல்களை கவிஞர். பா. விஜய் எழுதியுள்ளார். உணர்ச்சிப்பூர்வமான முறையில் சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு அசோக் ராஜன் நடனம் அமைத்துள்ளார். இது ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

SOURCE:tamil.oneindia.in












Thursday, February 14, 2013

Madurai Krishna Tv tamil TEST SIGNAL STARTED ON INTELSAT-17-66*E - MK TELEVISION tamil TEST SIGNAL STARTED ON INTELSAT-17-66*E

Madurai Krishna Tv tamil TEST SIGNAL STARTED ON INTELSAT-17-66*E
MK TELEVISION tamil TEST SIGNAL STARTED ON INTELSAT-17-66*E


MK TV NEW TAMIL TV CHANNEL


MK TV 
Sat:66.E 
FR.4015 
SR.30000 
POL.V 
DVB-S2 MPEG4 FTA NOW!

Madurai Krishna Tv
MK TELEVISION 
Address
No : 15, Vaithyanatha Iyer Street,
Shenoy Nagar, Madurai – 625 020.
Landmark: Near Rajaji Hospital
Mobile(M) 9487888106
 +(91)-9487888106 | 0452-6451119
Web - www.maduraikrishnatv.com




Tuesday, February 12, 2013

Tamilan TV 11th anniversary 12-2-2013

Tamilan TV 11th anniversary 12-2-2013
11-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழன் தொலைக்காட்சி


ONBATHULA GURU AUDIO LAUNCH today (12-2-2013) 6pm

ONBATHULA GURU AUDIO LAUNCH today (12-2-2013) 6pm


Dish tv New offer 2013 - pay 2year get 3year

Dish tv New offer 2013 - 
pay 2year get 3year

Pay For 2 years & Get 3 years!

Now recharge your super platinum pack for 2 years and get entertained for 3 years with 1 year's extra subscription absolutely free.

Get more entertainment at less!

Recharge your Platinum pack for 2 years and get the third year of its subscription absolutely FREE, i.e, 365 days of Platinum Pack free!



KHABAR FAST NEWS Hindi TEST SIGNAL STARTED ON INTELSAT-20-68.5*E

KHABAR FAST NEWS Hindi TEST SIGNAL STARTED ON INTELSAT-20-68.5*E

freq-3854
sym-7200
pol-H
system mpeg4/dvb s2
FTA mode


Contact Us


306 A, vidya Niketan Road. Model Town,
Rohtak (Haryana) Pincode - 124001
Email – svnnews@gmail.com
Ph :- 01262-213866 Mob :- 09812034016

SAKHI TV MALAYALAM TEST SIGNAL STARTED ON INTELSAT-17-66*E

SAKHI TV MALAYALAM TEST SIGNAL STARTED ON INTELSAT-17-66*E


freq - 4006
sym - 14400
pol - H
system dvb s2/mpeg4
fta mode 


Monday, February 11, 2013

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக்
கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த
சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?!

ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும்
எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர
மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான்.
இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க
வேண்டாம்"
என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது

Thanks For Support Manisat.Com - Reached 4-Lakhs Page Views

Thanks For Support Manisat.Com - Reached  4-Lakhs Page Views
0091-9842153374



0091-9842153374


Manisat.Com Today Reached 
4-Lakhs Page Views
0091-9842153374
Thanks For Support Manisat.Com

0091-9842153374

HBN TV Hindi shopping Channel TAMIL,MALAYALAM AUDIO FEED ADDED ON INTELSAT 20-68.5*East

HBN TV Hindi shopping Channel TAMIL,MALAYALAM AUDIO FEED ADDED ON INTELSAT 20-68.5*East


Hosanna Broadcasting Network (HBN) TV
INTELSAT 20-68.5*East
fre 3796
sym 7200
polar v

If Vishwaroopam issue continued, I would've settled in Bangalore, said Kamal Hassan.

விஸ்வரூபம் பிரச்சனை தொடர்ந்திருந்தால் பெங்களூரில் குடியேறியிருந்திருப்பேன்: கமல்

If Vishwaroopam issue continued, I would've settled in Bangalore, said Kamal Hassan.

பெங்களூர்: விஸ்வரூபம் பிரச்சனை தொடர்ந்திருந்தால் நான் பெங்களுரில் குடியேறி இருந்திருப்பேன் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி பிரச்சனைகள் எல்லாம் ஒரு வழியாகத் தீர்ந்து கடந்த 7ம் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல பிரச்சனைகளைத் தாண்டி வந்த விஸ்வரூபத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கமல் ஹாசன் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள ரேணுகாம்பா தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நேற்று விஸ்வரூபம் படம் பார்த்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கர்நாடகத்திற்கும், எனக்கும் நீண்ட கால தொடர்பு
விஸ்வரூபம் கர்நாடகத்தில் ரிலீஸாக ஒத்துழைப்பு கொடுத்த மாநில அரசு மற்றும் காவல் துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகத்தில் விஸ்வரூபம் வெற்றிகரமாக ஓடுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. கர்நாடகத்திற்கும் எனக்கும் நீண்ட காலமாக தொடர்பு உண்டு. நடிகர் அம்பரீஷ் எனது நண்பர்.

பெங்களூரில் குடியேறி இருந்திருப்பேன்
இந்த பட பிரச்சனையால் தமிழகத்தைவிட்டு வெளியேற நினைத்தேன். அப்போது பெங்களூருக்கு வந்துவிடுமாறு அழைப்பு விடுத்த மக்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அப்படி நான் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டி இருந்திருந்தால் நான் பெங்களுருக்கு வரும் வாய்ப்பு அதிகம் இருந்தது. பெங்களூரில் குடியேற எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டது உண்மையே நான் மதச்சார்பற்றவன்.
எனக்கு அரசியல் தெரியாது. அதனால் எனக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். தமிழகத்தில் விஸ்வரூபத்திற்கு தடைவிதிக்கப்பட்டதால் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை படத்தைப் பார்ப்பதன் மூலம் தமிழக மக்களும், ரசிகர்களும் எனக்கு கொடுத்துவிடுவார்கள்.

எனக்கு பிரச்சனைனா ரஜினி குரல் கொடுப்பார் 
ரஜினியும் நானும் ஒரே கலை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு எப்பொழுது பிரச்சனை என்றாலும் அவர் தான் முதலில் குரல் கொடுப்பார். அதே போன்று விஸ்வரூபம் பிரச்சனையிலும் குரல் கொடுத்தார் என்றார்.

tamil.oneindia.in/

Sri Lanka govt also lift ban on Kamal's Vishwaroopam film இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதி!

\இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதி! 
Sri Lanka govt also lift ban on Kamal's Vishwaroopam film.

கொழும்பு: இலங்கையில் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளதாக கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகம், மலேசியா அரசுகள் தடை விதித்திருந்தன. இலங்கையிலும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர் திரையிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இலங்கையிலும் தற்போது தடை நீக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்நாட்டின் கலாசார அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க கூறியிருக்கிறார்.


Sri Lanka President Mahinda Rajapaksa try to keep good relationship with Indian States Chief Ministers.

ராஜபக்சே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ஏன் வருகிறார்? பலே ராஜதந்திர வியூகம்!



சென்னை/கொழும்பு: தமிழகத்தின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே இந்திய மாநிலங்களுக்கு அடிக்கடி ராஜபக்சே வந்து செல்வதன் 'ராஜதந்திரம்', நமது அரசியல்வாதிகளை விஞ்சும் வகையில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையில் டெல்லி பயணம் என்பது இல்லாத ஒன்றாகவே உருமாறி வருகிறது. ஆம்.. ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் டெல்லியில் கோலோச்சக் கூடிய அல்லது கோலோச்சும் வாய்ப்பு இருக்கக் கூடிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தயவு இனி தேவை இல்லை என்பதுதான்.. ஏனெனில் இந்த இரண்டு கட்சிகளுமே இந்திய அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்திகள் என்ற வலுவை இழந்துபோய்விட்டன. இனிவரும் காலங்களில் இவை மேலும் பலமிழக்கவே வாய்ப்புகளே அதிகம். இந்திய அரசியலை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக மாநிலங்கள்தான் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன. மத்திய அரசு என்பது மாநிலக் கட்சிகள் நினைக்கும் வரைதான் பதவியில் இருக்க முடியும். இல்லையெனில் கவிழ்ந்தே ஆக வேண்டிய நிலைமைதான் இருக்கிறது. இந்த நிலைமையைத்தான் ராஜபக்சேவும் உணர்ந்து இதற்கேற்ப தமது காய்களையும் நகர்த்தி வருகிறார். ராஜபக்சே அண்மைக்காலமாக வந்து சென்ற மாநிலங்கள் 3. மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம், பீகார். இந்த மூன்று மாநிலங்களிலுமே கணிசமான லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. குறிப்பாக 3 மாநில முதல்வர்களுடனும் ராஜபக்சே தமது நல்லுறவை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். தமது ஒவ்வொரு பயணத்தின் போதும் மாநில முதல்வர்களை சந்தித்துப் பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி அதிக லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மாநில முதல்வர்களை நேரில் சந்தித்துப் பேசி நல்லுறவை வளர்ப்பதன் மூலம் தமக்கு ஆதரவான லாபியை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்பது ராஜபக்சேவின் வியூகமாக சொல்லப்படுகிறது. ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் இந்திய மாநில முதல்வர்களை தம் பக்கம் வளைத்துப் போடுவதன் மூலம் டெல்லியில் அமைய இருக்கும் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சிகள் தமக்கு எதிராக எந்த ஒரு நிலையையும் மேற்கொள்ளாத வகையில் தடுத்துவிடலாம் என்பதுதான் ராஜதந்திரமாக வைத்திருக்கிறார். இதனடிப்படையில் ராஜபக்சேவின் அடுத்த பயணம், அனேகமாக உத்தரப்பிரதேசத்தின் சாரநாத்தாக இருக்கலாம் அல்லது ஒடிஷாவின் புவனேஸ்வராக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. ஆமா நம்மூர் அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிடுகிறாரே!
Source- tamil.oneindia.in

கடல் படத்தினால் நஷ்டம் : மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர்கள் முற்றுகை

கடல் படத்தினால் நஷ்டம் : மணிரத்னம் வீட்டில் விநியோகஸ்தர்கள் முற்றுகை

சென்னை: கடல் படத்தால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. எனவே பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்காக அவர்கள் மணிரத்னம் அலுலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிரத்னம் தயாரித்து இயக்கிய கடல் படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படம் முதல் நாளே பெரும் தோல்விப் படமாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படம் குறித்து மணிரத்னம் ஏகத்துக்கும் பில்ட் அப் கொடுத்திருந்ததால், பெரும் விலை கொடுத்து படத்தை வாங்கினர் விநியோகஸ்தர்கள்.

ஆனால் படம் தோல்வியைத் தழுவியதால் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனர். கடல் படம் பல அரங்குகளில் ஒரே வாரத்தில் தூக்கப்பட்டுவிட்டது.

தங்களின் நஷ்டத்தை ஈடுகட்ட பணத்தை மணிரத்னம் திருப்பித் தர வேண்டும் என்று கோரி, அவரது வீட்டை முற்றுகையிடப் போவதாக விநியோகஸ்தர்கள் அறிவித்தனர். இதனால் அவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த நிலையில், கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் விநியோகஸ்தர்கள். அலுவலகத்தில் நுழைந்து நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோஷம் போட்டனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.

கடல் பட நஷ்டம்! மணிரத்னம் அறிக்கை!!
ராவணன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் கடல். கார்த்திக் மகன் கவுதமும், ராதா மகள் துளசியும் அறிமுகமாகியுள்ளனர். கடந்த பிப்.1ம் தேதி வெளிவந்த இப்படம் தோல்வியடைந்துள்ளது. இதனால் இப்படத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறி மணிரத்னம் வீட்டை விநியோகஸ்தர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இப்பிரச்னை தொடர்பாக மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, கடல் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீட்டு உரிமைகளை மெட்ராஸ் டாக்கீஸ் மார்ச் மாதம் 2012-ஆம் ஆண்டிலேயே ஜெமினி இன்டஸ்டிரீஸ் மற்றும் இமேஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு மினிமம் காரண்டி அடிப்படையில் விற்றுவிட்டது. இந்தப் பட வெளியீட்டிற்காக ஜெமினி நிறுவனம் செய்து கொண்டிருக்கக்கூடும் ஒப்பந்தங்களுக்கும் மெட்ராஸ் டாக்கீஸிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இது சம்பந்தமாக வேறெந்த நபரையும் மெட்ராஸ் டாக்கீஸ் அணுகவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் இந்த அறிக்கை கடல் படத்தின் நஷ்டத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருப்பதையே குறிப்பிடுகிறது.

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More