Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Friday, March 15, 2013

மாணவர் போராட்டத்துடன் இணைந்தார் நடிகர் சிலம்பரசன்.......வாழ்த்துவோம்....

மாணவர் போராட்டத்துடன் இணைந்தார் நடிகர் சிலம்பரசன் வாழ்த்துவோம்....


மாணவர்களின் வெறித்தனமான போராட்டம் .....
ஈழம் வென்றே தீறுவோம் ....


திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், இலங்கை மீது பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் தமிழகம் எங்கும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின்போது, பல லட்சம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இது தொடர்பான போர்குற்றக்காட்சிகளை சேனல்போர் தொலைக்காட்சி வெளியிட்டதை அடுத்து நாடு முழுவதும் பலத்த கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் இலங்கை போர்க்குற்றத்தை இந்தியா கண்டிக்க வேண்டும், இராஜபக்ஷேவிற்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே தமிழ் உணர்வாளர்கள் மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களும் போர்கொடி தூக்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இலங்கைக்கு எதிரான துரித நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டும், இராஜபக்ஷேவிற்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் நான்காவது நாளாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவி;த்து மாநில கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பட்டினி போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மற்ற மாணவர்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இலங்கை அதிபர் இராஜபக்ஷே உருவ பொம்மை இரண்டு இடங்களில் எரிக்கப்பட்டு இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் முன்பும், பழைய பேருந்து நிலையம் அருகிலேயும் இராஜபக்ஷே உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக மாணவ-மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
இலங்கை இன அழிப்புக்கு துணைபோன இந்திய அரசை கண்டித்தும், இராஜபக்ஷேவை தண்டிக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவ-மாணவியர் இன்று இரண்டாவது நாளாக பட்டினி போராட்டத்தை தொடருகின்றனர். இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் பிணக்குவியல், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களை பதாகைகளாக பிடித்துக்கொண்டு, இலங்கைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
கரூரில் இலங்கை பிரச்சினையை முன்னிருத்தி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவியர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக சாலை மறியல் செய்ய முயன்றவர்களை காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தை அறவழியில் நடத்த அறிவுருத்தினர்.
மதுரையில் கடந்த ஒரு வார காலமாக மதுரை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பேரணியும் நடத்தி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென ஒன்றுதிரண்டு தல்லாகுளம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட துணை ஆணையர் திருநாவுக்கரசு, ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் மாநில தலைவர் சகாயராஜ் உத்தரவிற்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். சென்னையை அடுத்த ஆவடியில் திருவள்ளுர் மாவட்டம் சார்பில் ஆவடி ரயில் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் ஒன்றுதிரண்டு மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி, திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி, அம்பத்தூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். சங்கத்தலைவர் அருள்மொழி, செந்தில்குமார், தமிழ் ஊடக பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலுசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்சோசப், மதியழகன், பார்த்தசாரதி, பரத்குமார், இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆவடி இணையாணையர் மனோகரன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே செங்கோட்டையில் தபால் நிலையத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இராஜபக்ஷேவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் தொடர்ந்து உருவபொம்மையை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
வால்பாறையில் நாம் தமிழர், பெரியார் திராவிடர்கழகம், ம.தி.மு.க, வழக்கறிஞர்கள், தமிழ் சங்கம் இணைந்து இராஜபக்ஷே கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்தந்த கட்சி, அமைப்புகளை சேர்ந்த நாகராஜ், குபேந்திரன். பொன்னுசாமி, சண்முகம், ராஜேந்திரன்,பெருமாள், விஸ்வநாதன், பாஸ்கர் உடப்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500-பேர் நேற்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ரத்த அஞ்சலி எனும் வித்தியாசமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலச்சந்திரனின் உருவப்படம் முன்பு கையை கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தத்தை வழியவிட்டு அஞ்சலி செலுத்தினர். இந்த போராட்டம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் வரும் 18-ஆம் தேதி அன்று தமிழக அளவில் ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Thursday, March 14, 2013

Astro Box Office Movies Thangathirai telecast Latest tamil movies

Astro Box Office Movies Thangathirai telecast Latest tamil movies

Astro Box Office Movies Thangathirai is a dedicated Indian channel which premieres a brand new Tamil movie every Friday at 9 pm without any commercial interruptions. You will be able to enjoy at least 4 new Tamil movies monthly. Watch the latest Tamil movies at your convenience; each Tamil movie will be available for 4 weeks. Subscribe to ABOM Thangathirai at only RM6.95 monthly to enjoy all these movies.
Samar
Malaysian TV Premiere
Premiere Date: 8 March 2013 (Friday, 9pm)
Show Date: 8 March 2013 till 4 April 2013
Starring: Vishal, Trisha, Sunaina, Sampath & Jayaprakash
Director: Thiru

Synopsis:
Sakthi (Vishal) is a guy who takes tourists on trekking in deep forest in and around Ooty. He is in love with Roopa (Sunaina), but they break up due to compatibility issues.

However, he receives a courier from his girlfriend with an apology for breaking away and a ticket to Bangkok where she resides now. Shakthi is excited and embark on the journey to Bangkok.

Being his first trip to a foreign country, Sakthi befriends Maya (Trisha) and seeks help from this beautiful co-passenger, a mystery woman on the flight who proves to be his saviour in the foreign land. Slowly, but surely they become friends and Shakthi tells Maya about his lady love.

In Bangkok, Shakthi expects to see his girlfriend at the airport, is instead greeted by the security personnel. Shakthi is confused and doesn’t understand why he was dragged off. However, he is caught up in a web of deceit when life becomes a reality show staged by two deadly guys John (JD Chakravarthy) and Arunachalam (Manoj Bajpai).

Things get bizarre and Shakthi soon gets mangled in more trouble with his assumed identity. He becomes trapped and doesn’t know what’s going on.


Kanna Laddu Thinna Aasaiya
Malaysian TV Premiere
Premiere Date: 15 March 2013 (Friday, 9pm)
Show Date: 15 March 2013 till 11 April 2013
Starring: Power Star Srinivasan, Santhanam, Sethu, Devadarshini, Vishaka Singh, Mayilsami, Kovai Sarala
Director: KS Manikandan

Synopsis:
Three friends, KK (Santhanam), Power (Power Star) and Shiva (Sethu) are close friends who pass their time by drinking and flirting with any girls they are attracted to.

However norm gets a flip when a pretty girl Sowmya (Visakha Singh) and her family move in to the neighbourhood. Three of them fall in love with Sowmiya and they challenge each other to woo the girl and marry her.

They make a gentleman agreement leaving the decision to the girl to choose her lover. In order to impress her, the three attempts three different methods.

One helps Sowmya 's mother in kitchen works, the other one joins her father’s tuition class and the third one comes to learn martial arts from her Grandfather.. the rest is all about who won the girl’s heart. Who will prevail?

SATTAM ORU IRUTTARAI
Malaysian TV Premiere
Premiere Date: 1 March 2013 (Friday, 9pm)
Show Date: 1 March 2013 till 28 March 2013
Starring: Thaman, Reema Sen, Piaa Bajpai, Bindu Madhavi
Director: Sneha Britto

Synopsis:
The story is about a college student Vijay (Thaman Kumar) whose sister Kausalya (Reema Sen) is the city police commissioner.

Vijay is on a revenge spree against three bad guys (Suresh, Radha Ravi, and Ram) who killed his lady love Jasmine (Pia Bajpai). Due to lack of evidence, the court releases them.

Meanwhile Vijay and his college friends including his current flame, Diya (Bindu Madhavi) plan meticulously the murder of two and is on the hunt for the third. At the same time Kausalya tries to bring Vijay to justice.

Chakravarthy Maaperum Vizha - Astro-Vaanavil

Chakravarthy Maaperum Vizha

Date : 23rd March 2013
Venue: Open Car Park, MYDIN Meru Raya, Ipoh
Time : 10AM -10PM

You heard the news, you’ve previewed the channels, now get ready for Chakravarthy Maaperum Vizha. Exclusively for you, a day filled with fun activities and a concert set to rock you. With your favourites from Vaanavil such as Denes, Revathy, Punnagai Poo Gheeta, Alinda, Dharshaini, Shamini, Iris, Brinda, Sivakumar, Shastan, Jegathisan and Shantesh as well as Sheezay, Candyman and Bugz from Psycho Unit, Mista G and not forgetting The Villanz Team, this is not something to be missed. On stage and at hand to tickle your funny bone are none other than Sathya and Gunse.

Think your friends won’t believe you were in the thick of it all? Don’t miss the instant photograph session with the artistes and the photo in an exclusive Chakravarthy photo frame just for you to take home.

For all the fans of last year’s Yuttha Medai contest, Ti Amo will thrill you with their incredible dance moves. And look who’s “stepping” in from Sungai Petani, the Silver Steppers of course. Not forgetting the guys and gals from the KL Mazhai Boys.

This fun filled carnival is going to start with a Grand Opening Parade, guaranteed to astound you. With lots of enjoyable fun game booths for all in the family, candy floss and pop-corn for the audience.

Don’t miss what is sure to be the event of the year! And definitely don’t miss a chance at the lucky draw prizes - 42’ LCD TV, Iphone 4 (2unit), Canon HD camcorder, RM 6,000 worth shopping voucher and gift hampers.

Wednesday, March 13, 2013

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?


நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? 
இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.

நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...!


via - இன்று ஒரு தகவல்.


source - facebook.com/tamilaalinaivom

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

‎"நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விளிப்புணர்வை ஏற்படுத்தவும்.- அதிர்ச்சி தகவல்"

தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு
மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான
தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்! வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி
அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!
நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி"
அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும். 16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங்கொள்ளையடிக்
கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தெண்டம் அழ வேண்டும். ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை' கூல்' பண்ணுவார்கள். இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது...
சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு...
உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்? செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை? பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விட மோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்? மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்...
அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில்
இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!
அதுவும் உங்களால் தான் முடியும்...

படித்ததில் பிடித்தது...
நன்றி :- திரு.முத்துராமலிங்க அவர்களின் பக்கத்தில் எடுக்கப்பட்டது.

source - facebook.com/tamilaalinaivom

DMCA.com
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More